பொரி தயாரிப்பு சூடு பிடித்துள்ளது!

ஆயுத பூஜையை முன்னிட்டு சேலத்தில் பொரி தயாரிப்பு சூடு பிடித்துள்ளது. நல்ல விலை கிடைக்கும் என்று கூறப்படுவதால் பொரி தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை பண்டிகைகளில் பொரிக்கு தனி இடம் உண்டு. தமிழகத்தில் சேலம், நாமக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பழமையான முறையில் பொறி தயாரிக்கப்படுகிறது.

இயந்திரங்களால் தயாரிக்கப்படும் பொறிகளை மக்கள் விரும்புவது இல்லை என்பதால், அடுப்பு பொறிக்கான ஆர்டர்கள் குவியத் தொடங்கி உள்ளனு.

சேலம் செவ்வாய்ப்பேட்டை, அம்மாபேட்டை, ஓமலூர் ஆகிய இடங்களில் அடுப்பு மூலம் பழமையான முறையில் பொரி தயாரிக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

கர்நாடகாவில் இருந்து 64 குவிண்டால் நெல்லை வரவழைத்து பொரி தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொரி தயாரிப்பவர்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version