"பூனை குட்டி வெளியே வந்தது" – மு.க.ஸ்டாலினுடன் கருணாஸ் சந்திப்பு

“பூனை குட்டி வெளியே வந்தது” – மு.க.ஸ்டாலினுடன் கருணாஸ் சந்திப்பு

சமீப காலமாக சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், ஆட்சியாளர்கள் குறித்தும், காவல்துறை உயர் அதிகாரிகள் குறித்தும் அவதூறாக பேசி வந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கருணாஸின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

பின்னர் இது குறித்த வழக்கில் சிறை சென்று தற்போது ஜாமினில் வெளிவந்துள்ள கருணாஸ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினார். இதன் மூலம் “பூனை குட்டி வெளியே வந்தது” என்ற பழமொழி கருணாஸிற்கு பொருந்துவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருணாஸ் எதற்காக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்தார் என்பதும், அவருக்கு பின்னால் யார் உள்ளனர் என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Exit mobile version