பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் பேராயரின் ஜாமீன் மனு மீண்டும் நிராகரிப்பு

கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்ததாக ஜலந்தரில் பேராயராக இருந்த ஃபிராங்கோ முல்லக்கல் கடந்த 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். வரும் 6 ஆம் தேதி வரை அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டதால், கேரள உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் கோரி அவர் மனு தாக்கல் செய்தார்.

மனு மீதான விசாரணையின் போது, ஃபிராங்கோவை ஜாமீனில் விடுவித்தால், விசாரணை பாதிக்கப்படுவதுடன், அவர் சாட்சிகளை கலைத்துவிடுவார் என காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இதனையடுத்து ஃபிராங்கோவின் ஜாமீன் மனுவை நிராகரித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Exit mobile version