பாலியல் புகாரில் ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தனியார் பள்ளியில், ராஜேஷ் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் அதே பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இது தொடர்பாக புகார் வந்ததையடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அதே பள்ளியில் நடத்துனராக பணியாற்றி வரும் ரவிசந்திரன் என்பவரும் பேருந்தில் பயணிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக தெரிய வந்ததையடுத்து ரவிசந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தலைமறைவான ஆசிரியர் ராஜேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version