பாஜகவின் ஆட்சிக்கு பாடம் புகட்டப்படும் -நாராயணசாமி

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை முதலாளிகளுக்கு ஆதரவாக நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டினர். இந்த திட்டத்தின் தோல்வியில் இருந்து சாதாரண மக்கள் மீண்டு வர முடியாமல் தவித்து வருவதாக நாராயணசாமி தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் கூறினார். வரும் நாடாளுமன்ற தேர்தல் பாஜகவின் ஆட்சிக்கு பாடம் புகட்டும் என முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Exit mobile version