பவுடர் மூலம் பழுக்கவைக்கப்பட்ட வாழைத்தார்கள் பறிமுதல்

கடலூர் உழவர் சந்தையில் ரசாயன பவுடர் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 3 டன் வாழைப்பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தையில் ரசாயன பவுடர் மூலம் வாழைத்தார்களை பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, உழவர் சந்தையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வாழைத்தார்களின் மீது ரசாயன பவுடர்கள் தெளிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 3 டன் வாழைத்தார்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், ரசாயன பவுடர் கலந்த வாழைத்தார்களை அழித்தனர். மேலும், ரசாயன பவுடர் மூலம் வாழைத்தார்களை பழுக்க வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

 

Exit mobile version