பதவி ஆசை பிடித்தவர்கள் டிடிவி தினகரன் – ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வேலூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், குடிசை வீடுகளை அகற்றி, புதிய வீடுகள் கட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார் என்றும், அதன்படி நான்கரை லட்சம் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாநில சுயாட்சியை நிலைக்கச் செய்தவர் ஜெயலலிதா என புகழாரம் சூட்டிய அவர், அதிமுகவை யாராலும் கைப்பற்ற முடியாது எனக் குறிப்பிட்டார். பதவி ஆசை பிடித்தவர்கள் தினகரனுடன் இருப்பதாக விமர்சித்த துணை முதலமைச்சர், திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் பணத்தை கொடுத்து வெற்றி பெறலாம் என்று தினகரன் நினைத்து வருவதாக குறை கூறினார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, கே.சி.வீரமணி, நிலோபர் கபில், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஜெயலலிதா உருவப் படத்திற்கு துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Exit mobile version