நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் – காமராஜ்

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, அவர்கள் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்வதற்கு வசதியாக நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து திறந்திருக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் தொடர்ந்து திறந்திருக்கும் எனக் கூறினார். பொதுவாக செப்டம்பர் மாதம், பராமரிப்பிற்காக கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டிருப்பதாகவும். ஆனால் இம்முறை அனைத்து கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட உள்ளதாகவும், வெளி மார்க்கெட்டில் நெல் விலை குறைவாக உள்ளதால் , விவசாயிகளுக்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் தேவை ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version