நிர்மலா தேவி விவகாரம் – ஒளிந்துள்ள பெரிய ஆட்கள்! பொன்.ராதா டுவிஸ்ட்!

 

நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரை சிக்க வைக்க சதி திட்டம் தீட்டப்படுகிறது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரை தொடர்புபடுத்துவதில் மிகப்பெரிய சதிச்செயல் உள்ளது என்று குற்றம் சாட்டினார். நிர்மலா தேவி விவகாரத்தில் மிகப்பெரிய ஆட்கள் ஒளிந்துள்ளதாகவும் அவர்கள் பற்றி தெரிய வந்துவிடக்கூடாது என்பதற்காவே இந்த மாதிரியான பொய்யான விஷயங்கள் பரப்பப்படுவதாகவும் அவர் புகார் கூறினார்.

Exit mobile version