நிர்மலா சீதாராமன் பதவி விலக கோரிக்கை!

ரபேல் விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் மீண்டும் பொய் சொல்வதால், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரபேல் போர் விமான விவகாரத்தில் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார் என்பதை, H.A.L. நிறுவன முன்னாள் தலைவர் டி.எஸ். ராஜு அளித்துள்ள தகவல் மூலம் தெளிவாகியுள்ளதாக ராகுல் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரபேல் விமானத்தை கட்டமைக்கும் தகுதி H.A.L. நிறுவனத்திற்கு உள்ளது என்று ராஜு கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பதவியில் நீடிக்கும் தகுதியை நிர்மலா சீதாராமன் இழந்துவிட்டதாகவும் ராகுல் சாடியுள்ளார்.

Exit mobile version