நாட்டிலேயே மருத்துவ சேவையில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாராட்டு தெரிவித்துள்ளார்

நாட்டிலேயே மருத்துவ சேவையில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை ராமாபுரம் தனியார் மருத்துவமனையில் நவீன மருத்துவ தொழில்நுட்பக் கருவிகள் இயக்கத்தை தொடங்கி வைக்கும் நிகழ்வில் ஆளுநர் பங்கேற்றார். விழாவில் பேசிய அவர், இந்தியாவிலேயே சிறந்த மருத்துவசேவை வழங்குவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக பாராட்டினார். தாய் சேய் இறப்பு விகிதத்தை தமிழகம் வெகுவாக குறைத்துள்ளதாகவும், ஆசியாவிலேயே மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டினர் அதிக அளவில் தமிழகத்தை நாடி வருவதாக அவர் தெரிவித்தார். மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலமாக 50 கோடி பேர். பயனடைவார்கள் என்றும் ஆளுநர் கூறினார்.

Exit mobile version