தொடர் விடுமுறை காரணமாக, கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கியுளள்ளனர்

தொடர் விடுமுறை காரணமாக, தமிழகத்தின் முக்கிய சுற்றுலாதளமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவியத் தொடங்கியுளள்ளனர். ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட விழாக்கள் காரணமாகவும், தொடர் விடுமுறை காரணமாகவும் கன்னியாகுமரியில் திரளான பொதுமக்கள் குவிந்துள்ளனர். இதனால், குமரியில் உள்ள விவேகானந்தர் பாறை, சங்குத்துறை கடற்கரை, செத்தவிளை கடற்கரை உள்ளிட்ட அனைத்து இடங்களும் சுற்றுலாப் பயணிகளால் நிறைந்து காணப்படுகிறது. இதேபோல், சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் தொடங்கியுள்ளதால், ஐயப்ப பக்தர்களின் வருகையும் கன்னியாகுமரியில் அதிகரித்துள்ளது. இதனிடையே, விஜயதசமியையொட்டி, அங்குள்ள கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளிலும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version