திமுக அளித்த டம்மி புகார் – திமுகவின் முகத்திரையை கிழித்த லஞ்ச ஒழிப்புத் துறை!

 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது திமுக கூறிய புகாருக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என, லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. நெடுஞ்சாலைப் பணிகளுக்கான டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாகவும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. திமுகவின் புகார் ஆரம்ப கட்ட விசாரணைக்கே முகாந்திரம் இல்லாமல் இருப்பதாக லஞ்ச ஒழிப்புதுறை இயக்குனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் நடந்து இருப்பதற்கான எந்த ஆதாரங்களும் விசாரணையில் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கின் மீதான தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

Exit mobile version