திமுகவில் தன்னை இணைப்பதாக தெரியவில்லை – மு.க.அழகிரி

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.அழகிரி, திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தை நோக்கி வரும் 5ஆம் தேதி அமைதி பேரணி நடத்த உள்ளதாக குறிப்பிட்டார். இந்த பேரணியை அண்ணாசாலையில் நடத்த அனுமதி கேட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். போக்குவரத்து காரணங்களுக்காக திருவல்லிக்கேணியில் பேரணி நடத்த அனுமதி தர வாய்ப்புள்ளதாக அழகிரி குறிப்பிட்டார். பேரணியில், சுமார் ஒரு லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்று அவர் தெரிவித்தார். தற்போதைக்கு திமுகவில் தன்னை இணைப்பதாக தெரியவில்லை என்று கூறிய அழகிரி, தனது மனக்குமுறலை மக்களிடம் நேரம் வரும்போது வெளிப்படுத்துவேன் என்று தெரிவித்தார்.

Exit mobile version