தலைசிறந்த மருத்துவ தலைநகரமாக சென்னை! – ஆளுநர் பன்வாரிலால் புகழாரம்

நாட்டின் தலைசிறந்த மருத்துவ தலைநகரமாக சென்னை திகழ்கிறது என்று, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

சென்னை, தனியார் விடுதியில் தொழில் வர்த்தக கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அளுனர் பன்வாரிலால் புரோகித், அரசு அதிகாரிகள், வர்தக கூட்டமைப்பு சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அரசாங்கத்தில் மட்டும் அல்ல, தனி மனித வாழ்க்கையிலும் வெளிப்படை தன்மை தேவை என அறிவுறுத்தினார்.

மேலும், தமக்கு ஹெலிகாப்டரில் செல்ல வாய்ப்பிருந்தும், மக்கள் பணம் வீணாகக் கூடாது என்பதாலேயே 24 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள சாலை மார்க்கமாக சென்றதாக கூறினார். மேலும், நாட்டின் மருத்துவ தலைநகராக சென்னை விளங்குவதாகவும், கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் ஏற்றுமதியில் நாட்டில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டினார்.

Exit mobile version