தமிழ் இசைக்கு இணையதளம் – ஏ.ஆர்.ரகுமான் தொடங்கினார்

தமிழ் இசையின் வரலாற்றை முன் வைத்து கருணாமிர்தசாகரம் என்ற நூலை ஆயிரத்து 917 ஆம் ஆண்டு ஆபிரகாம் பண்டிதர் எழுதினார்.

இந்நிலையில் அதேபெயரில், தமிழ் இசை ஆராய்ச்சி குறித்த இணையதளம் ஒன்றை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தொடங்கியுள்ளார். இந்த இணையதளமானது அவருடைய ஏ.ஆர்.ரகுமான் ஃபவுண்டேஷன் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட உள்ளது.

இணையதள உருவாக்கத்தில் கவிஞர் குட்டி ரேவதி பங்காற்றியுள்ளார். 3 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழ் இசை குறித்த ஆராய்சியை மேற்கொள்ள உதவும் இந்த இணையதளம், சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொடங்கப்பட்டுள்ளது.

Exit mobile version