தமிழகம் முழுவதும் 32 இடங்களில் ஐ.ஏ.எஸ் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி கல்வித்துறை மூலம் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், சிஏ படிப்பதற்கு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும், ப்ளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல், ஸ்கில் ரெயினிங் வகுப்புகள் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். கல்வியில் தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக நடிகர் ரஜினி காந்த் கூறிய கருத்துக்கு அமைச்சர் செங்கோட்டையன் நன்றி தெரிவித்தார்.

Exit mobile version