தஞ்சையில் கஞ்சா விற்பனை செய்த 13 பேர் கைது

தஞ்சையில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சாவை விற்பனை செய்த பெண் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், மாவட்ட எஸ்பி.செந்தில் குமார் தலைமையில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். புண்ணைநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள வயல் வெளியில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இவற்றை விற்பனை செய்த ஒரு பெண் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Exit mobile version