டேவிஸ் கோப்பை டென்னிஸ் – போபண்ணா ஜோடி தோல்வி

 செர்பியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் பிளே ஆப் சுற்றின் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் போபண்ணா, மைனேனி ஜோடி தொல்வியடைந்தது.

செர்பியாவில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடருக்கான ‘உலக குரூப் பிளே-ஆப்’ போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, செர்பியா அணிகள் பங்கேற்றுள்ளன. இதன் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், குன்னீஸ்வரன் ஆகியோர் தோல்வியைத் தழுவினர்.

இந்நிலையில், இரட்டையர்பிரிவு போட்டியில் இந்தியாவின் போபண்ணா, மைனேனி ஜோடி செர்பியாவின் நிகோலா மிலோஜெவிக், டானிடோ பெட்ரோவிக் ஜோடியை எதிர்கொண்டது.

இதில் போபண்ணா ஜோடி 6-7, 6-2, 7-6 என்ற செட்கணக்கில் தோல்வியைந்தது. இதன்மலம் 3-0 என செர்பியாவிடம் வீழ்ந்த இந்திய அணிக்கு, டேவிஸ் கோப்பை குரூப் சுற்றுக்குள் செல்லும் கனவு கலைந்தது.

Exit mobile version