டெல்லி அருகே அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்தில் 3 பேர் பலி

டெல்லி அருகே உள்ள நொய்டா பகுதியில் 6 மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் திடீரென இடிந்து, அருகே உள்ள 4 மாடி கட்டிடம் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படை வீரர்கள், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனவும் கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version