ஜப்பான் பிரதமர் தேர்தலில் சின்ஸோ அபே மீண்டும் போட்டி

ஜப்பான் பிரதமர் தேர்தலில், 3வது முறையாக பிரதமர் சின்ஸோ அபே போட்டியிட உள்ளார்.

ஜப்பானில் வரும் 20ஆம் தேதி பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் சின்சே அபே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இதனால் மூன்றாவது முறையாக பதவியேற்றால் ஜப்பானில் அதிக நாட்கள் ஆட்சி செய்த பிரதமர் என்ற பெருமையை சின்சே அபே பெறுவார். ஜப்பானின் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஷிகரு இஷிபா மட்டும் அபேவை எதிர்த்து போட்டியிடுகிறார். இந்தநிலையில் நட்பு நாடுகளின் மீது மற்ற நாடுகள் தாக்குதல் நடத்தும்பட்சத்தில், நட்பு நாடுகளுக்கு உதவி கரம் நீட்டும் வகையில் அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்ற விரும்புவதாக அபே தெரிவித்துள்ளார். அபேயின் இந்த கருத்து பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Exit mobile version