சென்னையில் 2,500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி! 

 

விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில், 2500 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது.

அசம்பாவிதங்களை தடுக்க இந்த ஆண்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சிலைகளை வைத்து வழிபட இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், பொது மக்களும் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். 

சென்னையில் 2,500 இடங்களில் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். எந்தெந்த தேதிகளில் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கு அனுமதி அளிக்கலாம் என்பது பற்றியும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். 

Exit mobile version