சென்னையில் பொது இடத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை தியாகராயநகரில் உள்ள வெங்கட் நாராயணா சாலையில் அடையாளம் தெரியாத நபர் சாலையோர மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தியாகராயநகர் ஆர்-1,மாம்பலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெங்கட் நாராயணா ரோடு மற்றும் பர்கிட் ரோடு சந்திப்பில் ரோட்டோரம் உள்ள மரத்தில் தான் அடையாளம் தெரியாத நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த மரத்தில், சுமார் 25 அடி உயரத்திற்கு ஏறிய அவர், தன்னுடைய வேட்டியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, அந்த வழியாகச் சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, தீயணைப்பு வாகனங்களுடன் வந்த போலீசார், தற்கொலை செய்துகொண்டவரின் உடலைக் கைப்பற்றினர். இதனையடுத்து, பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜுவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். மேலும், தற்கொலை செய்துகொண்டவருக்கு சுமார் 40 வயது இருக்கும் என்றும், தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Exit mobile version