சென்னையில் நாளை எம்.ஜிஆர் நூற்றாண்டு விழா

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் , கடந்த 2017 ஜனவரி 17 ஆம் தேதியுடன் எம்.ஜி.ஆர் பிறந்து 100 ஆண்டுகள் கடந்தததை அடுத்து அமைச்சரவை கூட்டத்தில் எம்.ஜி.ஆர் நுற்றாண்டு விழா கொண்டாடுவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை யொட்டி தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வருடமாக கொண்டாடப்பட்டு வந்த இந்த விழா நிர்வாக காரணங்களால் கன்னியாகுமரியிலும் சென்னையிலும் கொண்டாட முடியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது . இந்நிலையில் வரும் 22 ஆம் தேதி முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருவதாகவும் நாளை சென்னையில் நிறைவு விழா நடைபெற உள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version