சென்னையில் இரவில் பரவலாக கனமழை

சென்னையில் பல இடங்களில் நேற்றிரவும் பரவலாக கனமழை பெய்தது. 

மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மத்திய வங்கக்கடல் பகுதியில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்தாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே, மத்திய வங்கக்கடல் பகுதி, ஆந்திர கடல் பகுதிக்கு இன்றும், நாளையும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. ஜூன் 1–ந்தேதி முதல் தற்போது வரை தென்மேற்கு பருவமழை இயல்பான அளவை விட 13 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version