சிறைத்துறை அதிகாரிகள் 6 பேர் பணியிட மாற்றம்

சிறைத்துறை அதிகாரிகள் 6 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

புழல் சிறைத்துறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷிணி, புதுக்கோட்டை சிறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். கோவை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் புழல் சிறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். சேலம் மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளர் ஆண்டாள், வேலுார் சிறை கண்காணிப்பாளராகவும், கடலூர் கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷண்ராஜ், கோவை சிறை கண்காணிப்பாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

வேலூர் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் முருகேசன், திருச்சி சிறை கண்காணிப்பாளராகவும், திருச்சி சிறைத்துறை கண்காணிப்பாளர் நிஜிலா நகேந்திரன், கடலூர் சிறை கண்காணிப்பாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர். சிறைகளில் முறைகேடு நடந்ததை தொடர்ந்து சிறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதை அடுத்து சிறைத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Exit mobile version