News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

சிறைகளில் மருத்துவ வசதிகள் என்ன? விபரம் தர நீதிமன்றம் உத்தரவு

Web Team by Web Team
October 4, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
சிறைகளில் மருத்துவ வசதிகள் என்ன? விபரம் தர நீதிமன்றம் உத்தரவு
Share on FacebookShare on Twitter

சிறைகளில் உள்ள மருத்துவ வசதிகள் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யத் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறைகளில் மரணம் அடையும் கைதிகளின், உறவினர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது தொடர்பாக அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களும் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, உத்தரவு பிறப்பிக்கலாம் எனக் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை, தமிழகத்தில் உள்ள சிறைகளில் 134 கைதிகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர்களில் 109 பேர் முதுமையின் காரணமாகவும், 22 பேர் தற்கொலை செய்துகொண்டு இறந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையைப் பரிசீலித்த நீதிபதிகள், முதுமை காரணமாக இறந்ததாகக் கூறப்பட்ட 109 பேரும், சிறைக்குள் இறந்தார்களா அல்லது சிறைக்கு வெளியில் இறந்தார்களா என்ற விபரங்களை தெரிவிக்கவில்லை எனவும், சிறையில் உள்ள மருத்துவ வசதிகள் குறித்த விவரங்களையும் அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும்,

இந்த விவகாரம் தொடர்பாக சிறைகளில் கைதிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள் மற்றும் சுகாதார திட்டங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து வழக்கு விசாரணை வரும் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

 

Tags: HighCourtPrison Medical FacilitiesPuducherryசிறைசென்னை உயர்நீதிமன்றம்மருத்துவ வசதிகள்
Previous Post

தடையை மீறி போராட்டம் – இந்து அமைப்பினர் கைது

Next Post

மரங்கள் பாதுகாப்புச் சட்டம் வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை

Related Posts

அதிமுக வழக்கு – திங்கட்கிழமை ஒத்திவைப்பு!
அரசியல்

தமிழ்நாடு டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! என்ன திடீர்னு?

July 10, 2023
கடலில் பேனா சிலைவைப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மூவர் வழக்கு!
இந்தியா

’7’ புதிய தலைமை நீதிபதிகள்! மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை!

July 7, 2023
புயலுக்கு பின் அமைதி என்பதுபோல அக்னிக்கு முன் மழை!
தமிழ்நாடு

புயலுக்கு பின் அமைதி என்பதுபோல அக்னிக்கு முன் மழை!

May 2, 2023
மகாவீரர் ஜெயந்தி ஏன் கொண்டாடப்படுகிறது.. வரலாற்றைத் தெரிந்துகொள்வோம் வாருங்கள்..!
தமிழ்நாடு

மகாவீரர் ஜெயந்தி.. தமிழகம், புதுச்சேரியில் இறைச்சி மற்றும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன..!

April 4, 2023
புதுச்சேரி முதல்வருக்கு பொதுச்செயலாளர் நன்றி..!
அரசியல்

புதுச்சேரி முதல்வருக்கு பொதுச்செயலாளர் நன்றி..!

March 30, 2023
அதிமுக வழக்கு – திங்கட்கிழமை ஒத்திவைப்பு!
அஇஅதிமுக

அதிமுக வழக்கு – திங்கட்கிழமை ஒத்திவைப்பு!

February 16, 2023
Next Post
மரங்கள் பாதுகாப்புச் சட்டம் வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை

மரங்கள் பாதுகாப்புச் சட்டம் வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

Discussion about this post

அண்மை செய்திகள்

விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
ஒரு வேளை இருக்குமோ… தமிழிசை சவுந்தராஜனை கேக் வெட்ட சொல்லி கைதட்டிய பிடிஆர்!

ஒரு வேளை இருக்குமோ… தமிழிசை சவுந்தராஜனை கேக் வெட்ட சொல்லி கைதட்டிய பிடிஆர்!

September 25, 2023
பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்… சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!

பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்… சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
குடும்பத்துல இருக்க சனாதனத்தை ஒழிச்சுட்டு வாங்க உதயநிதி!

குடும்பத்துல இருக்க சனாதனத்தை ஒழிச்சுட்டு வாங்க உதயநிதி!

September 22, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version