News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

சிறைகளில் உள்ள மருத்துவ விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Web Team by Web Team
October 4, 2018
in TopNews, செய்திகள்
Reading Time: 1 min read
0
சிறைகளில் உள்ள மருத்துவ விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Share on FacebookShare on Twitter

சிறைகளில் உள்ள மருத்துவ வசதிகள் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யத் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறைகளில் மரணம் அடையும் கைதிகளின், உறவினர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது தொடர்பாக அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களும் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, உத்தரவு பிறப்பிக்கலாம் எனக் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

RelatedPosts

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022

இதன் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை, தமிழகத்தில் உள்ள சிறைகளில் 134 கைதிகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவர்களில் 109 பேர் முதுமையின் காரணமாகவும், 22 பேர் தற்கொலை செய்துகொண்டு இறந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையைப் பரிசீலித்த நீதிபதிகள், முதுமை காரணமாக இறந்ததாகக் கூறப்பட்ட 109 பேரும், சிறைக்குள் இறந்தார்களா அல்லது சிறைக்கு வெளியில் இறந்தார்களா என்ற விபரங்களை தெரிவிக்கவில்லை எனவும், சிறையில் உள்ள மருத்துவ வசதிகள் குறித்த விவரங்களையும் அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சிறைகளில் கைதிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள் மற்றும் சுகாதார திட்டங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து வழக்கு விசாரணை வரும் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Tags: ChennainewsjsabarimalaSupreme Court
Previous Post

ரெட் அலார்ட் எதிரொலி – முதலமைச்சர் முக்கிய ஆலோசனை

Next Post

கருப்பு வியாழன் ஆனது இந்திய பங்குச் சந்தை! 

Next Post
கருப்பு வியாழன் ஆனது இந்திய பங்குச் சந்தை! 

கருப்பு வியாழன் ஆனது இந்திய பங்குச் சந்தை! 

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist