சிறப்பு முகாம் – பொதுமக்கள் ஆர்முடன் பங்கேற்பு!

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம் செய்ய முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது. திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமினை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆசியா மரியம் அவர்கள் ஆய்வு செய்தார். அவருடன் திருச்செங்கோடு ஆணையாளர் மகேஸ்வரி திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் பாஸ்கர், தாசில்தார் சுப்பிரமணி, தேர்தல் துணை தாசில்தார் கார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர். இதில் வாக்காளர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

Exit mobile version