சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிய முதலமைச்சருக்கு பாராட்டு விழா.

 

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு 2 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, விளையாட்டு சங்கங்கள் சார்பில் வரும் 16-ம் தேதி பாராட்டு விழா நடத்தப்படுகிறது. விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 2 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வரும் 16-ம் தேதி சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் விளையாட்டு சங்கங்கள் சார்பில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடக்கவுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவர் ராமச்சந்திரன், நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளதாகக் கூறினார். மாநிலத்தில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கத்தினரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய மற்றும் சர்வததேச அளவில் தமிழகம் சார்பில் பங்கேற்று விருது பெற்றுத்தந்த வீரர்கள், வீராங்கனைகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்வார்கள் என்றார் அவர். மேலும் தமிழக அரசின் இடஒதுக்கீடு அறிவிப்பு மகிழ்ச்சியளிப்பதாகவும், வீரர்களுக்கு இது மேலும் ஊக்கத்தை அளிக்கும் வகையில் உள்ளதாகவும் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

Exit mobile version