சாத்தூர் அருகே 10 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டிகள் சாம்பல்

 

சாத்தூர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தால் 10 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டிகள் எரிந்து சாம்பலானது.

சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம் பண்னையில் சிவக்குமார் மற்றும் ரவிக்குமார் ஆகியோருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை உள்ளது.இங்கு மெழுகு மற்றும் மரக்குச்சியினால் ஆன தீப்பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிலையில் தீப்பெட்டி பண்டல்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென தீப்பற்றிக்கொண்டது.தகவலறிந்து வெம்பக்கோட்டை,சாத்தூர், மற்றும் சிவகாசி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 10 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் எரிந்து சாம்பலானது. மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version