கோவையில் 445 கிலோ குட்கா பறிமுதல்

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுகிறதா என்று மாநிலம் முழுவதும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அதனடிப்படையில் கோவை கருத்தம்பட்டி அருகே குட்கா கிடங்கு செயல்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அங்கு 445 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மேலும் அந்த குடோனின் உரிமையாளர் மாதவராம் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version