கோவையில் புறா பந்தயம் !

கோவையில் நடைபெற்ற புறா பந்தயத்தில் வெற்றிபெற்ற புறா உரிமையாளர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. 

கோவையில் பிஜீயன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் முதன் முறையாக மாவட்ட அளவிலான புறா பந்தயம் நடைபெற்றது. தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சாதா புறா, கர்ண புறா, இரட்டை சாதா மற்றும் இரட்டை கர்ண புறா உள்ளிட்ட புறாக்கள் இடம் பெற்றன.

போட்டிகளின் விதிப்படி காலை 7 மணிக்கு புறாக்களை பறக்கவிட்டு, பிறகு இரவு சரியாக எட்டு மணிக்கு புறாக்களின் உரிமையாளர்கள் வீட்டிற்கு வந்தடைய வேண்டும் என்பதே விதிமுறை.

இதன்படி சரியான நேரத்திற்கு வந்தடைந்த புறாக்களே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு கோப்பை மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்டது.

அந்த வகையில் காந்தாமணி, லட்சுமணன், மனோகரன், அச்சு ஹாசன் உள்ளிட்டோர் முதலிடத்தை பிடித்தனர்.

Exit mobile version