கேரள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார் ராகுல்

கேரளாவில் வரலாறு காணாதளவில் பெய்த கனமழையால் அந்த மாநிலம் கடுமையான சேதத்தை சந்தித்தது. ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது, நிவாரணப் பணிகள் அங்கு முழு வீச்சில் நடைபெற்று, இயல்புநிலை திரும்பி வருகிறது. இந்தநிலையில், வெள்ளத்தால் பாதித்த இடங்களை பார்வையிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா சென்றார். திருவனந்தபுரம் விமானநிலையத்தில் அக்கட்சியின் ராகுலை வரவேற்றனர். இதைத்தொடர்ந்து செங்கனூரில் உள்ள நிவாரண முகாம் சென்ற ராகுல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்த கட்சித் தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு ராகுல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

Exit mobile version