கேரளாவில் 2-வது நாளாக ராகுல் ஆய்வு

கேரளாவில் பெய்த மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட செங்கனூர் , ஆழப்புலா ஆகிய பகுதிகளை ராகுல் காந்தி நேற்று பார்வையிட்டார். அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து இரண்டாம் நாளாக இன்று வயநாடு , கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த இடங்களை அவர் பார்வையிட்டு , நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்திக்க உள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கான தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும் என்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு உதவிய மீனவர்களுக்காக நடந்த பாராட்டுவிழாவின் போது ராகுல் தெரிவித்தார்.

Exit mobile version