கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டிய பணம் -கேரள தொழிலாளிக்கு அதிர்ஷ்டம்

 

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது குஞ்சு மய்யலாத். இவர் அபுதாபியில் கடந்த 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.

அங்கு விற்பனையான ‘பிக் டிக்கெட்’ லாட்டரி சீட்டை சமீபத்தில் அவர் வாங்கியுள்ளார். அதில் பம்பர் பரிசு தொகையான 70 லட்சம் திர்ஹாம் இவர் வாங்கிய சீட்டுக்கு கிடைத்துள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பில் இது 13 கோடி ரூபாயாகும். இதனால் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார் முகமது குஞ்சு மய்யலாத். லாட்டரியில் கிடைத்த பரிசு தொகையில் இருந்து ஒரு பகுதியை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க அவர் முடிவு செய்துள்ளார். இவருடன் பணிபுரியும் நண்பருக்கு 2 சிறுநீரங்களும் செயலிழந்துவிட்டன. அவரது சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ய இருப்பதாகவும் முகமது குஞ்சு மய்யலாத் கூறியுள்ளார்.

Exit mobile version