News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

குழந்தைகள், காந்தியின் வழியைப் பின்பற்ற வேண்டும் – துணை முதலமைச்சர்

Web Team by Web Team
October 3, 2018
in TopNews, அரசியல், செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
குழந்தைகள், காந்தியின் வழியைப் பின்பற்ற வேண்டும் – துணை முதலமைச்சர்
Share on FacebookShare on Twitter

காந்தியின் வழியைப் பின்பற்றி குழந்தைகள் அனைவரும் வாழ்வில் மேன்மை அடைய வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேச தந்தை மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சத்தியாக்கிரக அறநெறி போராட்டத்தின் மூலம், விடுதலை பெற்றுத் தந்த புன்னியாத்மா காந்தியடிகள் எனப் புகழாரம் சூட்டினார்.

காந்தி, மேல் நாட்டு உடைகளை அறவே தவிர்த்து, இந்திய உடைகளையே அணிய வேண்டும் என முடிவெடுக்க வைத்து திருப்புமுனை ஏற்படுத்திய மாநிலம் தமிழகம் என்றும் பெருமையோடு நினைவு கூர்ந்தார். காந்தி, கடந்த 1921 ஆம் ஆண்டு தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேட்கொண்டபோது,

மதுரையில் அவர் வழி நெடுக கண்ட காட்சி அவர் உள்ளத்தைத் தைத்தது என்றும், கிராமப்புற ஏழை மக்கள் ஒரே ஒரு கோவணத்தை கட்டிக் கொண்டு இருப்பதைப் பார்த்த அவர், அன்று முதல் ஒரே ஒரு வேட்டியை மட்டும் தான் கட்டிக் கொள்ள முடிவு செய்தார் என்றும் சுட்டிக்காட்டினார். அந்தப் பெருமை தமிழகத்தையே சேரும் என்றும் குறிப்பிட்டார். மேலும், விளையாட்டுக்குக் கூட பொய் சொல்ல கூடாது எனக் குழந்தைகளிடம் எடுத்துரைத்தவர் காந்தி என்றும்,

அவரின் கொள்கைகளை பின்பற்றித் தான் மறைந்த புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர் அவர்களும், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களும் தாங்கள் நடித்த படங்களில் குழந்தைகளுக்கு நல்ல கருத்துகளை எடுத்துரைத்தனர் என்பதையும் நினைவு கூர்ந்தார். அத்துடன், காந்தியின் வழியைப் பின்பற்றி குழந்தைகள் வாழ்வில் மேன்மை அடைய வேண்டும் என்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.

Tags: Children should followDeputy CMpannircelvamஓ.பன்னீர்செல்வம்காந்திதுணை முதலமைச்சர்
Previous Post

வருகிறது ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள்!

Next Post

காந்தி பாடுபட்டது காங்கிரஸ் கட்சிக்காக அல்ல! – வைரமுத்து

Related Posts

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை
TopNews

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை

July 7, 2021
அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை
TopNews

அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை

July 5, 2021
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு கோரிக்கை
TopNews

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு கோரிக்கை

June 12, 2021
“மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டும் திமுகவினர் மீது நடவடிக்கை தேவை”
TopNews

“மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டும் திமுகவினர் மீது நடவடிக்கை தேவை”

May 24, 2021
“தமிழ்நாட்டில் அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்”
TopNews

“தமிழ்நாட்டில் அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்”

April 6, 2021
ஆ.ராசாவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்!
TopNews

ஆ.ராசாவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்!

March 28, 2021
Next Post
காந்தி பாடுபட்டது காங்கிரஸ் கட்சிக்காக அல்ல! – வைரமுத்து

காந்தி பாடுபட்டது காங்கிரஸ் கட்சிக்காக அல்ல! - வைரமுத்து

Discussion about this post

அண்மை செய்திகள்

2022ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு!

2022ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு!

January 27, 2023
புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!

January 27, 2023
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!

January 27, 2023
16 ஆண்டுகளுக்கு பிறகு பழநி முருகன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்..!

16 ஆண்டுகளுக்கு பிறகு பழநி முருகன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்..!

January 27, 2023
சிகரெட் பற்ற வைப்பதை குத்துவிளக்கு ஏற்றுவதுடன் ஒப்பிட்ட அமைச்சர் கே.என். நேரு!

சிகரெட் பற்ற வைப்பதை குத்துவிளக்கு ஏற்றுவதுடன் ஒப்பிட்ட அமைச்சர் கே.என். நேரு!

January 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist