கிருஷ்ணா நதி நீர் பூண்டிக்கு வந்தது- சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது.

 

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமான கிருஷ்ணா நீர், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு வந்தடைந்தது

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னையின் குடிநீருக்காக கடந்த 22-ஆம் தேதி  300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. படிப்படியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு, ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டை வந்தடைந்த கிருஷ்ணா நீர், பூண்டி நீர்தேக்கத்தை  வந்து சேர்ந்தது. இதனால் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. பூண்டு நீர்தேக்கத்தில் தற்போது 19 மில்லியன் கனஅடி நீர் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version