காஷ்மீரில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர்.

குல்காம் மாவட்டத்தின் கவுகாம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இதனால், தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் நீடித்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த சண்டை காரணமாக பாராமுல்லா – குவாலிகண்ட் இடையேயான ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

Exit mobile version