News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

காமரூபத்தில் இருந்து ஒரு நீதிதேவன்…

Web Team by Web Team
October 2, 2018
in TopNews, இந்தியா
Reading Time: 1 min read
0
காமரூபத்தில் இருந்து ஒரு நீதிதேவன்…
Share on FacebookShare on Twitter

இந்திய பறவையின் தனித்து விடப்பட்ட சிறகென தூரத்தில் விழுந்து கிடக்கிறது வடகிழக்கு மாநிலங்கள். அதில் ஒன்று காமரூபம் என அன்றைய தினம் அழைக்கப்பட்டது, இப்போது அது அஸ்ஸாம். இந்திய எல்லைக்கோட்டை தீர்மானிக்கும் அந்த மாநிலத்தில் இருந்து தான் நியாயத்தின் நீள்கோட்டை எழுதும் நீதிபரிபாலனத்தின் உச்ச இடமான உச்சநீதிமன்றத்தில் வந்து அமர்கிறார் ரஞ்சன் கோகாய்.

1954-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ந் தேதி அஸ்ஸாம் மாநிலத்தின் தேநீர் நகரம் என்று அழைக்கப்படும் திப்ரூகர் நகரில் பிறந்தவர் ரஞ்சன் கோகாய். அஸ்ஸாம் மாநில முதலமைச்சராக இருந்த கேசாப் சந்திர கோகாய்-க்கு பிறந்த இவர் தமது பள்ளிப்படிப்பை திப்ரூகரின் டான் பாஸ்கோவிலும், டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட புனித ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்றில் முதுகலை படிப்பையும் முடித்தார்.

1978-ம் ஆண்டு கௌஹாத்தி நீதிமன்றத்தில் வழக்கறிராக பணியை துவக்கிய அவர், அரசியல் சாசனம் – வரி சிக்கல்கள் – கம்பெனி விவகாரங்கள் போன்ற துறைகளில் துவக்கத்தில் ஆர்வம் காட்டினார். இதன்பின்னர் 2001-ம் ஆண்டு கௌஹாத்தி நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். வடகிழக்கின் 7 மாநிலங்களுக்கு அவர் ஒருவரே நீதிபதியாக இக்காலகட்டத்தில் அவர் பணியாற்றினார். 9 ஆண்டுகளுக்குப் பிறகு 2010-ம் ஆண்டு பஞ்சாப் – ஹரியானா மாநிலத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். குறுகிய காலத்திலேயே 2012-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளில் ஒருவராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

தற்போது உச்சநீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார் ரஞ்சன் கோகாய். வடகிழக்கு மாநிலங்களில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் முதலாவது நபர் இவராவார். ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் 13 மாதங்கள் ஆகும். நாளை (3/10/18) முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 18-ந் தேதி வரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் செயலாற்றுவார்.

விடைபெற்று செல்லும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வழக்குகளை பாரபட்சமாக ஒதுக்கீடு செய்கிறார் என்று போர்க்கொடி உயர்த்திய நான்கு நீதிபதிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று கேரளாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சௌமியா வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனையில் இருந்து விலக்கு அளித்தது, வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை வழக்கில் கெடு விதித்தது போன்ற வழக்குகளில் ரஞ்சன் கோகாய் வழங்கிய தீர்ப்பு சர்ச்சைகளை உண்டாக்கியது.

மத்திய அரசு – நீதிமன்றம் இடையிலான மோதல் போக்கு அதிகரித்து வரும் சூழலில் உரிமைகளை பேசும் ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நாற்காலியில் அமர்வது காலத்தின் கட்டாயம் என்றே சொல்லலாம். எதிர்வரும் ஒரு வருடத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் வழங்க போகும் தீர்ப்புகள் இந்திய ஜனநாயகத்தின் மாண்பை போற்ற வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

 

 

Tags: Chief Justiceranjan gogoi
Previous Post

அண்ணல் காந்தியடிகளின் 150வது பிறந்த நாள் விழா – சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

Next Post

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்த வேண்டும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

Related Posts

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதிக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
TopNews

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதிக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

October 29, 2019
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹியை நியமனம் செய்ய கொலிஜியம் பரிந்துரை
TopNews

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹியை நியமனம் செய்ய கொலிஜியம் பரிந்துரை

October 17, 2019
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்க தலைமை நீதிபதியின் வெளிநாட்டுப் பயணம் ரத்து?
TopNews

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்க தலைமை நீதிபதியின் வெளிநாட்டுப் பயணம் ரத்து?

October 17, 2019
தஹில் ரமானியின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றார் குடியரசுத் தலைவர்
TopNews

தஹில் ரமானியின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றார் குடியரசுத் தலைவர்

September 21, 2019
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் அமர்வு
TopNews

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் அமர்வு

April 24, 2019
வடகிழக்கில் இருந்து முதல் தலைமை நீதிபதி!
TopNews

வடகிழக்கில் இருந்து முதல் தலைமை நீதிபதி!

October 3, 2018
Next Post
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்த வேண்டும்  – அமெரிக்க அதிபர் டிரம்ப்

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்த வேண்டும் - அமெரிக்க அதிபர் டிரம்ப்

Discussion about this post

அண்மை செய்திகள்

பொங்கல் பரிசுத் தொகுப்பினைக் கூட ஸ்டாலினால் ஒழுங்காகக் கொடுக்க முடியவில்லை – கே.எஸ். தென்னரசு விளாசல்!

பொங்கல் பரிசுத் தொகுப்பினைக் கூட ஸ்டாலினால் ஒழுங்காகக் கொடுக்க முடியவில்லை – கே.எஸ். தென்னரசு விளாசல்!

February 7, 2023
படையெடுக்கும் வட இந்தியர்கள்.. வேலையின்றி தவிக்கும் தமிழர்கள்!

படையெடுக்கும் வட இந்தியர்கள்.. வேலையின்றி தவிக்கும் தமிழர்கள்!

February 7, 2023
உலகின் முதல் ‘வாழும் பாரம்பரிய பல்கலைக்கழகம்’… இந்தியாவின் விஷ்வ பாரதி பல்கலைக்கழகம் – யுனஸ்கோ அறிவிப்பு

உலகின் முதல் ‘வாழும் பாரம்பரிய பல்கலைக்கழகம்’… இந்தியாவின் விஷ்வ பாரதி பல்கலைக்கழகம் – யுனஸ்கோ அறிவிப்பு

February 7, 2023
தமிழக அரசு அறிவித்துள்ள மழை நிவாரணம்.. விவசாயிகள் கடும் கண்டனம்..!

தமிழக அரசு அறிவித்துள்ள மழை நிவாரணம்.. விவசாயிகள் கடும் கண்டனம்..!

February 7, 2023
கரும்பு பயிரை தாக்கிய மஞ்சள் வைரஸ் !

கரும்பு பயிரை தாக்கிய மஞ்சள் வைரஸ் !

February 7, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version