கருண் நாயர் தேர்வு செய்யப்படாததற்கு நான் காரணமா? – விராட் கோலி கோபம்

 

கருண் நாயர் தேர்வு செய்யப்படாததற்கு நான் காரணமில்லை என விராட் கோலி கூறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ,இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இரு அணிகளுக்கான முதல் டெஸ்ட் போட்டி, நாளை துவங்குகிறது. இந்த நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயர் சேர்க்கப்படவில்லை. இங்கிலாந்து தொடரில் அவர் சேர்க்கப்பட்டும் அவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்பட வில்லை.இதனால் அவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி , வீரர்களை தேர்வு செய்வது என்னுடைய வேலை இல்லை என்று கூறியுள்ளார். வீரர்கள் தேர்வு தொடர்பான முடிவுகள் அனைத்தும் ஒரே இடத்தில் எடுக்கப்படுவதாக நினைத்து மக்கள் குழம்புகின்றனர். ஆனால், அதில் உண்மை இல்லை. அனைத்து முடிவுகளும் ஒரே இடத்தில் எடுக்கப்படுவதில்லை என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருண் நாயர் நீக்கம் தொடர்பாக தேர்வாளர்கள் ஏற்கனவே பதிலளித்துவிட்டனர் என்பதால் அதைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்றார். மேலும் வீரர்களை தேர்வு செய்வதும் என்னுடைய வேலை இல்லை” என்றும் கூறியுள்ளார் விராட் கோலி.

Exit mobile version