கருணாஸ் சட்டமன்றத்திற்குள் நுழையக் கூடாது – குமரி அனந்தன் சூளுரை

குடிப்பதற்காகச் செலவிடுவதாக கூறும் எம்.எல்.ஏ. கருணாஸ் சட்டமன்றத்திற்குள் நுழையக் கூடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் சூளுரைத்துள்ளார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி காந்தி பிறந்த நாளில், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

குறிப்பாக, இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு ஏற்ப நடந்து கொள்வேன் என்று கூறி, சட்டமன்ற உறுப்பினராக கருணாஸ் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டதைச் சுட்டிக்காட்டிய அவர், ஆனால், எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு விரோதமாக மதுவிற்காகப் பல லட்சம் செலவு செய்வதாக கருணாஸ் கூறியதையும் சுட்டிக்காட்டினார். இதனால், கருணாஸ் சட்டமன்றத்திற்குள் நுழையக்கூடிய உரிமையை இழந்துள்ளார் என்றும், கருணாஸ் சட்டமன்றத்திற்கு வரக் கூடாது என்று அவருக்குத் தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்றும் குமரி அனந்தன் சூளுரைத்தார்.

 

 

Exit mobile version