கருணாநிதிக்கு 5வது நாளாக தொடர்ந்து சிகிச்சை

சிறுநீரக தொற்று, காய்ச்சல், ரத்த அழுத்தம் குறைவு போன்றவை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி கடந்த 27ஆம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று 5வது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் மருத்துவ குழுவினர், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனிடையே கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் அவர் தங்கி சிகிச்சை பெறுவார் என்று தெரிவித்துள்ளது. கடந்த 29ஆம் தேதி கருணாநிதிக்கு சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டதால், அவருக்கு மருத்துவ ரீதியாக பின்னடைவு ஏற்பட்டது என்றும், மருத்துவ சிகிச்சைகளுக்கு அவரது உடல் நல்ல ஒத்துழைப்பு அளித்ததால், கருணாநிதியின் முக்கிய உடல்கூறுகள் படிப்படியாக சீரான நிலையை அடைந்துள்ளன என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வயது முதிர்ச்சியால் ஏற்படும் பொதுவான உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version