கண்டதும் காதல் கொள்ளுங்கள்- சர்ச்சை த்ரிஷா

 

சில பேருக்கு காதல் என்றாலே பிடிக்காது. சிலருக்கு அது பிடிக்கும். அதே நேரம் காதலித்தாலும் பெற்றோர் அனுமதி, கல்யாணத்துக்கு தேவை என்று அவர்கள் வாதிடுவார்கள். ஒரு காலத்தில் பார்க்காமல் காதல் கொள்வது கூட இருந்தது. ஆனால் இந்த டிஜிட்டல் யுகம், பார்க்காமல் காதலுக்கு சமாதி கட்டி விட்டது. பார்த்தவுடன் காதல் கொள்ளலாமா என்று கேட்டால் , அது தவறு என்று பலர் வாதிடுவார்கள். பார்த்து பழகி பேசி அப்புறம் சரியாக இருந்தால் தான் காதலை சொல்லவேண்டும் என்பார்கள் அந்த காரியக்காரர்கள்.

இதனிடையே நடிகை த்ரிஷா பார்த்தவுடன் காதல் கொள்ளுங்கள் என தெரிவிக்க,அதை கேட்டு பலர் கொந்தளித்து வருகிறார்கள். அது என்னவென்று பார்ப்போம்.

சமீபத்தில் த்ரிஷா துபாய் சென்றிருந்தார். அங்கே, நட்சத்திர ரிசார்ட் ஒன்றில் டால்பின் வசிக்கும் குளத்தில் குதித்து டால்பினுடன் விளையாடி மகிழ்ந்திருக்கிறார். அதை படம் பிடித்து வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய, த்ரிஷா பரபரப்பு செய்தியாகிவிட்டார்.

நடிகை த்ரிஷா, டால்பினுடன் தொட்டு விளையாடி முத்தம் கொடுக்கும் படங்களை ‘கண்டதும் காதல் என்று சொல்வதை நம்புங்கள்’ என்று தலைப்பிட்டு தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

டால்பின் – த்ரிஷா படங்களை பார்த்த விலங்கு நல ஆர்வலர்கள் பொங்கி எழுந்து விட்டார்கள். ‘இது டால்பினைக் கொடுமைப்படுத்தும் செயல். இத்தனைக்கும் த்ரிஷா விலங்குகள் கொடுமைப்படுத்துவதை எதிர்க்கும் அமைப்பின் தூதுவர்களில் ஒருவர். அவர் இப்படி நடந்து கொள்ளலாமா? என்று கேட்டு அவரை குடைந்தெடுக்கிறார்கள்.

Exit mobile version