கடலூர் சிறையை தகர்க்க வெளிநாட்டு தீவிரவாதிகள் சதியா? – பரபரப்பு

தீவிரவாத இயக்கத்தினால் கடலூர் மத்திய சிறைக்கு அச்சுறுத்தல் என ரகசிய தகவல் கிடைத்ததால், ஏராளமான போலீஸார் இரவு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  

சிரியாவில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.,சுக்கு, ஆதரவாக செயல்பட்டதாக கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டைச் சேர்ந்த அன்சர் மீரான் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் கடலூர் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடலூர் மத்திய சிறையை தகர்த்து அன்சர் மீரானை விடுவிக்கவுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சிறைத்துறை டிஐஜி சண்முக சுந்தரம் தலைமையில் கடலூர் மத்திய சிறையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதனால் சிறை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

Exit mobile version