கங்கையில் புனித நீராடிய பெண் பலாத்காரம்

கங்கையில் புனித நீராடிய பெண்ணை 2 பேர் பலாத்காரம் செய்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் பிகார் மாநிலம் பாட்னாவில், கங்கை நதியில், மதச் சடங்குகளுக்காக 45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் நீராடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரு ஆண்கள் அவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதோடு, அதில் ஒரு நபர் அதை வீடியோவும் எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்தவுடன் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த அவலத்தை கிராம மக்களிடம் தெரிவித்து அவர்களின் துணையோடு காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்.

காவல்துறை விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய நபரின் பெயர் ஷிவ்புஜன் மஹ்தோ என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version