ஓய்வு பெற்ற நீதிபதி ரயிலில் பாய்ந்து தற்கொலை! சோகம் தாங்கமுடியாமல் மனைவியும் தற்கொலை!

திருப்பதி அருகே ஓய்வு பெற்ற நீதிபதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது மனைவியும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வு பெற்ற நீதிபதியான சுதாகர் அவரது மனைவி வரலட்சுமி ஆகியோர் குடும்பத்துடன் திருப்பதியை அடுத்த திருச்சானூரில் வசித்து வந்தனர். இந்த நிலையில் ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு சென்ற சுதாகர் திடீரென ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கணவரின் இழப்பை தாங்க முடியாத லட்சுமி, அவர் உயிரிழந்த அதே இடத்தில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்காண காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version