News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஐ.நா.வில் கோரிக்கை வைக்கும் இலங்கை!

Web Team by Web Team
September 15, 2018
in TopNews, உலகம்
Reading Time: 1 min read
0
ஐ.நா.வில் கோரிக்கை வைக்கும் இலங்கை!
Share on FacebookShare on Twitter

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக இலங்கை சார்பில் புதிய கோரிக்கைகளை வைக்கப் போவதாக அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டு போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சுமார் 20 ஆயிரம் தமிழர்கள் காணாமல் போனதாக புகார் கூறப்பட்டது. இதற்கு இலங்கை ராணுவம், கடற்படை மற்றும் அந்நாட்டு காவல்துறையே காரணம் என மாயமானவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

RelatedPosts

இலங்கை அரசின் 6 இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல்

இலங்கை அரசின் 6 இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல்

June 4, 2021
தாவூத் இப்ராஹிமுடன் நேரடித் தொடர்பு – இலங்கை தாதா கட்டகாமினி கைது!

தாவூத் இப்ராஹிமுடன் நேரடித் தொடர்பு – இலங்கை தாதா கட்டகாமினி கைது!

October 14, 2020

இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக வெவ்வேறு காலகட்டங்களில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், இலங்கை ராணுவத்தினர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா. பொதுச்சபையின் 73வது கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இதில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான பிரதிநிதிகள் குழு பங்கேற்க உள்ளது.

இந்தக் கூட்டத்தில் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அரசு உள்ளது. குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக பல்வேறு சலுகைகளை கேட்க உள்ளதாக இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை தனிமைப்படுத்தப்படுவதை தடுத்து, நல்ல நட்புறவையும் உருவாக்க முயற்சி செய்ய உள்ளதாக தெரிவித்தார். இலங்கை ராணுவத்தினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகளை நீக்குமாறு வலியுறுத்த இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: Sri lankaUN
Previous Post

தென்னை மரங்களை வேரூடன் விற்பனை செய்யும் விவசாயிகள்!

Next Post

பணி நியமன ஆணை – முதலமைச்சர் வாழ்த்து

Next Post
பணி நியமன ஆணை – முதலமைச்சர் வாழ்த்து

பணி நியமன ஆணை - முதலமைச்சர் வாழ்த்து

Discussion about this post

அண்மை செய்திகள்

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

மாசு நிறைந்த திருமணிமுத்தாறு துர்நாற்றத்துடன் பொங்கும் நுரை | DYING WATER | POLLUTION |

April 17, 2022
திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

திமுக எம்எல்ஏ-வின் சகோதருக்கு முதல் மரியாதை வழங்கிய அரசு அதிகாரிகள்

April 17, 2022
'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

'ஸ்டாலின் ஒரு கொரோனா' – உதயநிதி ஒரு உருமாறிய கொரோனா..!

April 16, 2022
இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

இளம்பெண்களின் ஆபாச வீடியோ INSTA-வில் பழகி ஏமாற்றிய என்ஜீனியர்

April 16, 2022
புது டம்ளர், புது தட்டு  நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

புது டம்ளர், புது தட்டு நீங்க கலக்குங்க ஸ்டாலின்..!

April 16, 2022
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist