ஏசியில் இருந்து வெளியான விஷவாயு – ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!

 

சென்னையில் ஏசியில் ஏற்பட்ட கசிவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள மேட்டுக்குப்பம் பகுதியில் சரவணன் என்பவர் தனது மனைவி கலையரசி மற்றும் 8 வயது மகன் கார்த்திகேயனுடன் வசித்து வந்தார்.

இன்று அதிகாலை 3 மணி அளவில் அந்தப் பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதனால், வீட்டில் உள்ள இன்வெண்டர் மூலம் ஏசி இயங்கியது. திடீரென ஏசியில் இருந்து ஏற்பட்ட புகையால், சரவணனும் அவரது மனைவி மற்றும் மகன் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

அவர்களின் உடல்களை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏசியில் இருந்த வாயு கசிந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

 

Exit mobile version