எம்.ஜி.ஆர் நூற்றாண்டு புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திறந்து வைத்தார்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் உள்ள 31 மாவட்டங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் நிறைவு விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று பிற்பகல் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி ஒய்எம்சிஏ திடலில், எம்ஜிஆரின் சாதனைகள், மக்களுக்கு ஆற்றிய தொண்டுகள் செயல்படுத்திய திட்டங்கள் பற்றிய புகைப்பட கண்காட்சி நடத்தப்படுகிது. இந்தக் கண்காட்சியை துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் திறந்து வைத்தார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ,சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,  கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

எம்ஜிஆர் புகைப்பட கண்காட்சியை அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

Exit mobile version